தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு..!! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்..!! இடியமின் சொன்ன அப்டேட்..!!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அக்னி வெயில் :
கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகியதால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டின், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெப்பம் சிறிது தணிந்துள்ளது.
சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, மாடம்பாக்கம், செம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை லேசான மழை விட்டுவிட்டு பெய்தது.
வானிலை ஆய்வு மையம் :
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் குடிதாங்கி, மதுரை மாவட்டம் சாத்தியால் தலா 5 செ.மீ. மழை பதிவு, கோவை மாவட்டம் ஆழியாரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி, கூடலூர், பெரியகுளம், கோவை பெரியநாயக்கன்பாளையம் உள்பட 12 இடங்களில் தலா 2 செ.மீ மழையும், உதகை, பரலியாறு, ஜெயங்கொண்டம், மதுரை, மேட்டுப்பாளையம் உள்பட 28 இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை :
இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
கனமழை :
கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை :
மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக வெயிலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..