ADVERTISEMENT
கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி 3 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறினார்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வன விலங்குகள் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதுவரை வயநாட்டில் வன விலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து வயநாடு பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திய காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மேலும் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)