இந்தியாவின் எதிர்காலம்… இதயத்துடிப்பு இனிமேல் ஸடார்ட்அப் நிறுவனங்ஙகள்தான் என்று அரசியல் கட்சிகள் கூறி வந்தன. ஆனால், தொடங்கிய வேகத்திலேயே அவை மூடப்பட்டு வருகின்றன என்கிற தகவலை மட்டும் யாரும் வெளிப்படுத்துவதில்லை.
கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் 28,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதோடு, புதிதாகத் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. 2025ம் ஆண்டில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை 125 நிறுவனங்கள்தான் தொடங்கப்பட்டுள்ளன.
அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப் பிரதேசம் , தெலங்கானா ஆகியவை உள்ளன. மற்ற மாநிலங்களில் குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அக்கறை எடுத்து கவனிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இன்றைய ஆன்லைன் காலக்கட்டத்தில் ஸ்டார்ட்அப் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது.. இன்னொருவரிடம் பணி ஆளாக இருப்பதை விட சொந்த பிசினஸ் மூலம் முதலாளியாக மாறலாம் என்கிற மன ஓட்டம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது பாராட்டுக்குரியது என்றாலும், உண்மையாக உழைக்க மறந்து விடுகின்றனர்.
ஓர் ஐடியா இருந்தால் போதும்… நிறுவனம் தொடங்கிவிடலாம் என நினைக்கிறார்களே தவிர, சந்தையிட்ல தங்கள் பொருட்களுக்கு தேவை உள்ளதா? மார்க்கெட்டில் உள்ள சவால்கள் என்ன? போட்டியாளர்கள் யார்? தொடர்ந்து,வெற்றிக்கரமாக நிறுவனத்தை நடத்த தேவை என்ன என்பதை யாரும் புரிந்துக் கொள்ள மறுப்பதே தோல்விக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
ஸ்டார்ட்அப் இளைஞர்கள், தங்கள் ப வலுப்படுத்துவதிலும், திறமையை உயர்த்துவதிலும் கவனம் செலுத்துவதில்லை என்றும் நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முதலீட்டாளர்களிடமிருந்து நிதியை பெறுவதிலும் வங்கிகளில் கடன் வாங்குவதிலும் முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால், பிசினஸை வளர்ப்பதில் கோட்டைவிடுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
‘ஸ்டார்ட்அப்’ என்பதை உயர்த்திப் பிடிக்கும் அரசுகளும் தனியார் அமைப்புகளும் எத்தனை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்று சொல்வதைப் பெருமையாகவும் அரசியலாகவும் பார்க்கின்றன. ஆனால், அவை சிறப்பாக இயங்குகிறதா? லாபக்கரமான பாதையில் செல்கின்றதா? என்பதை கவனிக்க தவறி விடுகின்றன.
நிறுவனங்கள் மூடப்பட்டால் தொழில்முனைவோர்களுக்கும், முதலீடு செய்தவர்கள், பணியாளர்கள் என எல்லா தரப்பினரையுமே பாதிக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், தரம் மற்றும் செயல்திறனில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை உணர்ந்து அரசு, தனியார் அமைப்புகள், தொழில்முனைவோர் என அனைத்துத் தரப்புமே ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும்.
கணிசமான ஆரம்ப முதலீடுகள் இருந்தாலும் செலவை கட்டுப்படுத்துவ்தில் அனுபவமின்மையால் தொடக்கத்திலேயே பல சவால்களை எதிர்கொண்டன. இதனால், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.