1000 செடி, மரங்கள் நடுவதற்கான இலக்கு..! அசத்திய பிரபல பாலிடெக்னிக் கல்லூரி..!
உலக சுற்று சூழல் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது., அந்த வகையில் சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெ.தெ.லீ.செங்கல்வராயர் நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று AIM, GEM, LIONS Club போன்ற பல்வேறு NGO களின் ஒருங்கிணைப்பில் கொண்டாடப்பட்டது.
முன்னதாக 1000 செடிகள் மற்றும் மரங்களை நடுவதற்கான இலக்கு முன்மொழியப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் நாளான இன்று 300 செடிகள் மற்றும் மரங்கள் NSS UNIT சார்பில் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியை அன்புச்செயலாளர் தொ.மு.சாம்பசிவம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அவர்கள் துவக்கி வைத்தார், நமது தலைமையாசிரியர் டாக்டர்.எம்.வெங்கடராம் அவர்கள் தலைமை வகித்தார்.
NSS PO T.M.ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார், Tmt.B.மாலதி, NSS PO நன்றியுரையாற்றினார்.
அனைத்து 300 செடிகள் மற்றும் மரங்கள் எங்கள் பாலிடெக்னிக் & அறக்கட்டளையின் அனைத்து பணியாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், மருத்துவர்கள் மற்றும் எங்கள் NSS தன்னார்வலர்களால் நடப்பட்டன.
இதில் பாலிடெக்னிக்கல்லூரியின் அறக்கட்டளையின் ஊழியர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும், மருத்துவர்கள் மற்றும் எங்கள் NSS தன்னார்வலர்களால் கலந்து கொண்டனர்.
85 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கல்லாரியில் NSS மூலம் இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..