‘பெடிக்யூர்’ இனி வீட்டிலே செய்யலாம்… எப்படினு பார்க்கலாம் வாங்க…
ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை பாதம் மூடும் அளவிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த நீரில் சிறிதளவு உப்பு, பாதி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்துக் கலந்து, அதில் பாதங்களை 20நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அந்த நீரில் போட்ட உப்பு, கால்களில் உள்ள அழுக்குகள், கிருமிகள் போன்றவற்றை நீக்குகிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. பின்னர் பிரஷ் பயன்படுத்தி பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
கால் விரல் நகங்களில் நெயில் பாலீஷ் போட்டிருந்தால், நெயில் பாலீஷ் ரிமூவர் மூலம், பழைய நெயில் பாலீஷை ரிமூவ் பண்ண வேண்டும். நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும்.
பிறகு பியூமிஸ் ஸ்டோனை வைத்து, குதிகால் உள்ளிட்டவற்றை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
பின் பாதங்களை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். அடுத்து, ‘ஸ்கிரப்பிங்’ செய்ய வேண்டும். ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் பழச்சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
இதனை கால் விரல்கள் மற்றும் உள்ளங்கால்களில் நன்கு தேய்த்து, 5 நிமிடத்துக்குப் பின்னர் நீரினால் கழுவி விட வேண்டும்.
கடைசியில்,தேங்காய் எண்ணெய்யை மாய்சரைசராக கால்களில் தடவி கொள்ள வேண்டும். இதைப்போல் பெடிக்யூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்,
1. கால் பாதங்களில் வெடிப்பு வராது.
2. பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாது.
3. இறந்த செல்கள் நீங்கி பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.
4. சருமம் மென்னையாகவும் பொலிவுடனும் காணப்படும்.