ஆட்டு குட்டியால் அவமானப்பட்ட அண்ணாமலை..!! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று புதுக்கோட்டையில் பாதயாத்திரை சென்றுள்ளார்.
அப்போது அண்ணாமலைக்கு விவசாயிகள் வெள்ளாட்டு கிடா குட்டியை பரிசாக கொடுத்துள்ளனர்.
அந்த கிடா குட்டியை கையில் வாங்கிய அண்ணாமலை.., கூட்டத்தை பார்த்து இங்கு எத்தனை பெண் விவாசாயிகள் உள்ளீர்கள் என கேட்டுள்ளார்.
அதில் 3 பெண்கள் கையை தூக்கியுள்ளனர்.., அதில் ஒரு பெண்ணை மற்றும் பார்த்து கொஞ்சம் வந்து வேனில் ஏறுங்கமா என கேட்டுள்ளார்.
பின் அந்த ஆட்டுக்குட்டிக்கு சிவகாமி என பெயர் வைத்து.., இந்த ஆடு பல குட்டிகளை போடும்.., நீங்கள் இதை சிறப்பாக வளர்க்கும் படி கேட்டு கொள்கிறேன் என சொல்லிக்கொண்டே.., கிடா வை கொடுத்துள்ளார்.
அப்போது கீழே நின்று கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் அண்ணா.. அது பொம்பள ஆடு இல்லைனா, அது ஆம்பள ஆடுனா என கத்தியுள்ளனர்.
இதை காதில் வாங்காத அண்ணாமலை ஆட்டுகுட்டியை பார்த்து சிவகாமி வரட்டுமா என கேட்டுள்ளார்..
இவர் செய்த இந்த செயலை பார்த்த பொதுமக்கள்.., சிரிப்பை அடக்க முடியாமல் அங்கேயே சிறித்துள்ளனர்.
ஒரு பெண் ஆட்டிற்கும் கிடாவிற்கும் கூட வித்தியாசம் தெரியலையே என பாஜக தொண்டர்கள்.. தலையில் அடித்துக்கொண்டனர்.