கோயில் திருவிழாவில் தீ மிதிக்கும் போது, ஒரு பெண் குழந்தையுடன் தீக்குழியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
மன்னார்குடி சத்ய மூர்த்தி மேட்டு தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் கடந்த 18-ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி உள்ளிட்டவற்றை சுமந்து சென்றனர்.
இந்நிலையில், கோயில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில், உமா என்ற பெண் தனது 5 வயது பேத்தியுடன், பால்குடத்தை சுமந்து கொண்டு இறங்கினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறியதில் இருவரும் தீக்குழியில் விழுந்தனர். இதைத் தொடர்ந்து, சுற்றி இருந்த பக்தர்கள், அவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டதில் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
Discussion about this post