நாயுடன் உறவு கொண்ட இளம்பெண் கைது… வெளியானது உண்மை காரணம்!
நாயுடன் உடலுறவு கொள்ளும் வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் 19 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிசிசிப்பியைச் சேர்ந்த டெனிஸ் ஃப்ரேசியர் என்ற 19 வயது இளம் பெண், ஸ்னாப்சாட்டில் நாயுடன் உறவு கொண்டது போன்ற வீடியோவை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ வைரலானதை அடுத்து, இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விலங்குகளை கொடுமைப்படுத்தல் மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மிசிசிப்பியில் விலங்குகளை துன்புறுத்தினால் அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், ஆனால் இளம் பெண் நாயுடன் உடலுறவு கொண்டது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளம் பெண்ணுடன் வீடியோவில் இருக்கும் ஜெர்மன் ஷெப்பர்டு நாயானது விலங்குகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் கிராபிக்ஸ் என கருதப்பட்ட இந்த வீடியோ, உண்மையானது என்பதும் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்க இளம் பெண் இப்படியொரு கீழ்த்தரமான காரியத்தில் இறங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கைது டெனிஸ் தான் நாயுடன் உறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த ஜோன்ஸ் கவுண்டி போலீஸ் ஆபீசர் ஒருவர் கூறுகையில் : “எனது 17 வருட சட்ட அமலாக்கத்தில், நான் இதுவரை விசாரித்ததில் மிகவும் குழப்பமான வழக்குகளில் இதுவும் ஒன்றாகும் என அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.