ஜிகர்தண்டாவில் கிடந்த கம்பி..!! உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி..!! பரபரப்பான திருப்பூர்…!!
திருப்பூரில் உள்ள பிரபல மதுரை ஜிகர்தண்டா கடையில் ஜிகர்தண்டாவில் கம்பி இருந்ததால் 50 கிலோ ஜிகர்தண்டாவை கீழே ஊற்றி அளித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அளித்தனர்..
திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் முரளி இருவரும் அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை ஜிகர்தண்டா கடையில் வாடிக்கையாளர் குடித்த ஜிகர்தண்டாவில் கம்பி இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு கடையின் உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது.. இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கடுப்பான வாடிக்கையாளர்.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மதுரை ஜிகர்தண்டா கடையில் சோதனை நடத்தியதோடு ., கடையில் இருந்த 50 லிட்டர் மதிப்பிலான ஜிகர்தண்டாவை கீழே ஊற்றி அளித்தோடு சுகாதாரமாக இல்லாத காரணத்திற்காக பிரபல மதுரை ஜிகர்தண்டா கடைக்கு அபராதம் விதித்துள்ளனர்..
திருப்பூரில் பிரபல மதுரை ஜிகர்தண்டா கடையில் ஜிகிர்தண்டாவில் கம்பியிருந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.