“நீ வரும் போது நான் நனைவேனா..” 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. எனவே தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..