யூடியூபில் பத்திரிகையாளர் பிஸ்மி வாரிசு பட தயாரிப்பாளர் கூறிய கருத்தை ஆதரிக்கும் வகையில் ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார் தற்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கருத்து தெரிவித்ததை அடுத்து ரஜினி ரசிகர்கள் அவரின் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டது பேசுபொருளாகியுள்ளது.
பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர் தன்னுடன் இரண்டு நபர்களை சேர்த்து கொண்டு சினிமா நிலவரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது இயல்பான ஒன்று. இரண்டு வாரங்களுக்கு முன்பு வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் 1 என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதனை தொடர்ந்து அது பற்றி பேசிய பிஸ்மி தில் ராஜு பேசியது தவறான செயலாக இருந்தாலும் ஆனால் அவர் பேசியது உண்மை என்று கூறினார்.
இது குறித்து அவர் பேசுகையில், தெலுகு பட தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது தவறு இருப்பினும் அவர் கூறியது உண்மை தான் ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் தற்போது விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் இதனை விநியோகிஸ்தகர்கள் உட்பட அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்று அந்த நேர்காணலில் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ரஜினி ரசிகர்கள் சிலர் பிஸ்மியின் அலுவலகத்திற்கு சென்று அவரை மிரட்டும் தோணியில் முற்றுகையிட்டுள்ளனர் இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.