இது என்ன கிரிக்கெட் விளையாட்டா..? தேமுதிகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்..!
மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிகவினர் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என காமராசர் நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் இன்று விருதுநகரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெருந்தலைவர் காமராஜர் இல்லத்திற்கு மீண்டும் வருகை தந்தது மிகவும் பெருமைப்படுகிறேன். விருதுநகர் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லியில் சென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதிவு செய்தது பின்னர் பெருந்தலைவர் இல்லத்திற்கு வந்துள்ளேன்.
பெருந்தலைவரின் பெருமை தமிழக மட்டுமில்லாமல் உலகமே மெச்சுகிறது. இந்தியாவும் பெருமைப்படுகிறது. கர்மவீரர் காமராஜர் அவரது ஆசியுடன் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணியை தொடங்குகிறேன் என தெரிவித்தார்.
அதன் பின்னர் மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் ஆணையத்திற்கு இன்று சென்றுள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட்டு கிடையாது. திரும்பவும் கொண்டு போய் பேட்டிங் கொடுங்கள் என்று சொல்ல முடியாது. தேர்தல் கமிஷனர் நடத்தப்பட்டு நேர்மையான அதிகாரிகளால் வாக்குகள் எண்ணப்பட்டது.
அவர்களும் ஏற்றுக் கொண்டு (தே.மு.தி.க) வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது பின்னரே வீட்டிற்குச் சென்று அவரது தாயார் பிரேமலதாவை கூட்டிக்கொண்டு முதலில் இருந்து ஆட வேண்டும் என கூற இது கிரிக்கெட் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை மறு வாக்கு எண்ணிக்கை கோருவது சிறு பிள்ளைத்தனமானது. என்னைப் பொருத்தவரை மூவரும் தேர்தல் கமிஷனை பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்படிப்பட்ட பொய்யான, வெறும் விளையாட்டுத்தனமான விளம்பரத்திற்காக செய்யும் விஷயங்களை தேர்தல் கமிஷன் கிளர்க் தான் அந்தப் பெட்டிஷனை வாங்கி உள்ளார். தேர்தல் கமிஷன் அதிகாரிகளே மனுவை வாங்கி இருக்க மாட்டார்கள். வெறும் விளம்பரத்திற்காக தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
பொய் பிரச்சாரத்தை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள். வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று டெல்லியில் எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. விருதுநகர் மக்களவைத் தொகுதி மக்களின் குரலாக எனது குரல் டெல்லியில் ஒலிக்கும்.
குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் வெற்றி என்பது ஒரு ஓட்டில் வெற்றி பெற்றாலும் அது வெற்றி வெற்றிதான். தேர்தல் கூட்டணி என்பது வித்தியாசமானது. ஜாதி அரசியல் காரணமாகவும் இருக்கலாம் என்றார்.
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது என கேள்வியில் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் மத்தியிலே ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி அரசாக மோடி அரசு அமைந்துள்ளது.
தனி பெரும் கட்சியாக இல்லாமல் நிதீஷ் குமாரையும் சந்திரபாபு நாயுடுயும் நம்பி இருக்கின்ற கட்சியாக மாறி உள்ளது. உபி மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி உள்ளதாக கூறியுள்ள பாஜக அங்கும் தோல்வியுற்றுள்ளது.
வருகின்ற அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, அடுத்து பீகார் மாநிலத் தேர்தல் நான்கு தேர்தலிலும் பாஜக தோல்வி அடைவார்கள். அதன் பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். பாஜக கூட்டணி ஆட்சி நீடிக்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்துள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்தவர் தேர்தல் வரவருக்கு வாய்ப்பு குறைவு. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் வருகிறது. இதில் பாஜக வெற்றி பெறுமா என்பதை அண்ணாமலை தான் தெரிவிக்க வேண்டும் என்றார்.
மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பங்கீடு குறைவாக வழங்கப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து தான் அதிகமான வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் மத்தியிலாலும் பாஜக அரசு தென் மாநிலங்களுக்கான நிதியை குறைத்து வழங்கி வருவது கண்டிக்கத்தக்கது என்றார்.
– லோகேஸ்வரி.வெ