மோடி மீது செல்வப்பெருந்தகை வழக்கு..!! நீதிபதிகள் சொன்ன முடிவு..?
பிரதமர் நரேந்திர மோடி மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடி மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்..
செல்வப்பெருந்தகையின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.., அந்த வகையில் முதல்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலும், இரண்டாம் கட்டமாக ஆந்திராவிலும், மூன்றாம் கட்டமாக நேற்று மேற்கு வங்காளத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வப் பெருந்தகை தாக்கல் செய்ய்யப்பட்டுள்ள மனுவில், இதுவரை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மத வெறுப்புகளைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதால்
மத கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ள பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்..
வழக்கறிஞ்சர்கள் பின் வாங்கல் :
செல்வப்பெருந்தகை தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் பிரதமர் மோடி மீது இருப்பதால்.., இந்த வழக்கை எடுத்து விசாரணை செய்ய எந்த வழக்கறிஞ்சர்களும் முன் வராமல் பின் வாங்குவதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அதன் பின் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர்கள் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளனர். மேலும் இந்த மனுவில் உள்ள குறைகளை சரி செய்து புதிய மனுத் தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்ளும் படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.