விஸ்வரூபம் எடுத்த 2ஜீ..!! டெல்லி ஐகோர்ட் எடுத்த முடிவு..!!
2ஜி முறைகேடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு அளித்தது.
இதற்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுமதி மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந் தேதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில், 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் மே மாதம் முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.