தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் மாவட்ட காவல் துறை சாா்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க கூட்டத்தின் எதிரொலியாக, அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் பொது இடங்களில் இருந்த சாதிய அடையாளங்களை அழித்தனா்.
புளியம்பட்டி சவலாப்பேரியில் உள்ள காவல் துறை சாா்பில் அண்மையில் சமூக நல்லிணக்கக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், வன்முறையைத் தடுப்பது, சமூக நல்லிணக்கம், சகோதரத்துவத்தை மேம்படுத்தவது, அனைத்து சமூக மக்களும் பயன்படுத்தும் பொது இடங்களில் வன்முறையைத் தூண்டக்கூடிய சாதிய அடையாளங்களை அகற்றுவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் வலியுறுத்தினாா்.
அதன் எதிரொலியாக, மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளா் லோகேஸ்வரன், புளியம்பட்டி காவல் ஆய்வாளா் தா்மா், உதவி ஆய்வாளா் சதீஷ் நாராயணன் மற்றும் போலீஸாா் முன்னிலையில், ஆலந்தா, சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்காபுரம் ஆகிய கிராமங்களில் ஊா் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பொது இடங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அழித்தனா். இதனையடுத்து அக் கிராமங்களைச் சோந்தோருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் பாராட்டுத் தெரிவித்தாா்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post