விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! உதயநிதி சொன்ன முக்கிய அறிவிப்பு..!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் , திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாமாத்தூரில் இன்று பிரச்சாரம் செய்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது, “தற்போது விசிக ரவிக்குமாரையும், கடந்த சட்டமன்ற தேர்தலில் புகழேந்தி ஆகியோர் வெற்றி பெற்றிருப்பது போல, இந்த முறை அன்னியூர் சிவாவை குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்வீர்களா என கேட்டுக்கொண்டார்.
பின்னர், விக்கிரவாண்டி தொகுதியில் வரவுள்ள சில திட்டங்கள் குறித்த தேர்தல் அறிக்கைகளையும் எடுத்துரைத்தார்.
- சாத்தனூர் அணையின் உபரிநீர், நந்தன் கால்வாயில் விடப்பட்டு விக்கிரவாண்டி தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பனமலைப்பேட்டை ஏரியில் கலக்கும் விதமாக திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
- விக்கிரவாண்டியில் 3 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீதிமன்றம் கட்டப்படும்.
- 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டுமானப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் திறக்கப்படும்.
- முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகில் தேசிய நெடுஞ்சாலையில் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
- உயர்மட்ட மேம்பாலம் விரைவில் முடிக்கப்படும்.
போன்ற வாக்குறுதிகளை வாக்காளர்கள் முன் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. மேலும் அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் பற்றி கூறி எடுத்துரைத்தார்..
‘நந்தன் கால்வாய் திட்டமானது 75% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அன்னியூர் ஊராட்சியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு புதிய காத்திருப்போர் கூடம் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல், எண்ணாயிரம் ஊராட்சியில் புதிய கால்நடை மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டு. எண்ணாயிரம் ஊராட்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய வேளாண்மை தானியக்கிடங்குகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விக்கிரவாண்டி பேரூராட்சியில் வெங்கடேஸ்வரா நகரில் 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களான புதிய மின்மயானம், புதிய பேருந்து நிலையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. என கூறினார்.
– லோகேஸ்வரி.வெ