பாலாவுடன் இணையும் விக்ரம்? பாராட்டு விழாவில் சூர்யா..!!
1999 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி வெளிவந்த சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. அவர் இயக்குனராகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு அவர் அடுத்து இயக்கியுள்ள வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்த வாரம் டிசம்பர் 18ஆம் தேதி சென்னையில் பாலாவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த உள்ளார். அதற்காக இயக்குனர்கள் ஆர்.கே. செல்வமணி லிங்குசாமி, மிஸ்கின் சமுத்திரக்கனி ராம் ஏ.எல் விஜய் வணங்கான் படத்தின் நாயகன் அருண் விஜய் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளார் தயாரிப்பாளர்.
அந்த விழாவில் பாலா படத்தில் நடித்தவர்கள் பணியாற்றிய இதர கலைஞர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்து உள்ளார்கள். இயக்குனர் பாலாவின் முதல் படமான செது படத்தின் கதாநாயகன் விக்ரம் இரண்டாவது படமான நந்தா படத்தின் கதாநாயகன் சூர்யா ஆகியோர் அந்த படங்களுக்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தார்கள். பாலா இயக்கிய பிதாமகன் படம் விக்ராமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது.
ஆனால் அவர்கள் இருவருமே தற்போது பாலாவுடன் நல்ல உறவில் இல்லை. விக்ரமின் மகன் துரு விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ஆதித்யா வர்மா படம் காரணமாக இயக்குனர் பாலாவுக்கும் விக்கிரமிக்கும் சண்டை ஏற்பட்டது. அடுத்து வணங்கான் படத்தில் சூர்யா தயாரித்து நடிக்க ஆரம்பித்து விலகினார். அந்த படத்தை சுரேஷ்காமாட்சி தயாரிக்க அருண் விஜய் நடித்து முடித்தார்.
பாலாவிற்கு பாராட்டு விழா என்றால் விக்ரம் சூர்யா இருவரது வருகை இல்லாமல் முழுமை அடையாது. பகையை மறந்து அவர்கள் இருவரும் இந்த விழாவில் பங்கேற்கலாம். அவர்களுக்கு விழாக்குழுவினர் தவறாமல் அழைப்பு விடுத்து பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துவார்களா? என்பது விரைவில் தெரியவரும்.