அண்ணாமலையின் செருப்பை இசட் பிரிவு ராணுவ வீரர் பாதுக்காத்தது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் நடைப்பயணத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணம் முடித்தப் பின்னர் மதுரை வழியாக சென்றுக்கொண்டிருந்தார்.
அவ்வழியாக சென்ற அண்ணாமலை கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அவருடைய காலணியை வெளியில் விட்டுள்ளார். பின்னர் உடனிருந்த இசட் பிரிவு ராணுவ வீரரிடம் காவலுக்கு இருக்குமாறு நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
மேலும், அண்ணாமலை நினைவிடத்தில் இருந்து வெளியே வரும் வரை அந்த காலணியை தனது துப்பாக்கியால் ஏந்தி பாதுக்கத்தும் கொண்டிருந்தார். இதுத்தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து அனைவரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும், தனது கடின உழைப்பால் ராணுவ வீரரான ஒருவரை காலணியைப் பாதுகாக்க சொல்லும் அண்ணாமலை நாட்டு மக்களிடமும், ராணுவத்திடம் மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: https://www.madhimugam.com/dmk-organizing-secretary-rs-bharati-has-questioned-why-governor-tamilisai-is-angry-with-the-prime-minister/