எத்தனை குடும்பங்கள் அழிந்தால் ஒன்றிய அரசு விழிக்கும்..!! ராகுல்காந்தி கேள்வி..!!
எத்தனை இரயில் விபத்துகள் நடந்துள்ளது.. அதில் பல லட்சம் உயிர்கள் பறிபோயுள்ளது.. அப்படி இருந்தும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. என ராகுல்காந்தி ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்..
நேற்று இரவு மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578), மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் நேற்று இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய வேண்டிய நிலையில் கால தாமதமாக நேற்று இரவு 9.24 மணிக்கு வந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் பின்புறத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.. அந்த விபத்தில் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது..
மேலும் சரக்கு இரயில் தடம் புரண்டதில் சில பெட்டிகளில் தீ பற்றியுள்ளது.. அதே சமயம் பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மற்றும் மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்துள்ளது. இதனை கண்ட கவரைபேட்டை பொதுமக்கள் மற்றும் அங்கிருந்த பயணிகள் தீயணைப்பு துறை மற்றும் காவலர்கள் தகவல் கொடுத்துள்ளனர் மேலும் அவர்களும் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கவரப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்..
இதுவரை இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.. ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சூலூர்பேட்டை, நெல்லூர், திருப்பதி எக்ஸ்பிரஸ்., புதுச்சேரி, விஜயவாடா., கடப்பா – அரக்கோணம், டெல்லி, தமிழ்நாடு எக்ஸ் பிரஸ்., சார்மினார் எக்ஸ்பிரஸ் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது..
இந்த நிலையில், இந்த ரயில் விபத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது.. ஒடிஷா மாநிலம் பாலாசோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரைப்பேட்டையிலும் மீண்டும் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது..
இந்த கோர இரயில் விபத்துகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை இந்தியாவில் எத்தனை இரயில் விபத்துகள் நடந்துள்ளது.. அதில் பல லட்சம் உயிர்கள் பறிபோயுள்ளது.. அப்படி இருந்தும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிந்தால் ஒன்றிய அரசு விழித்துக் கொள்ளும் என என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.