ரஷ்யா 125 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது..!
ரஷ்யாவிற்கும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையில் இப்பிரிவின் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஒரே இரவில் உக்ரைனின் 125 ஆளில்லா விமானங்களை ரஷ்யாவின் ஏழு பிராந்தியங்களில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது.
இதில் ரோஸ்டோவ் பகுதியில் 18 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் இதன் பாகங்கள் காட்டுக்குள் விழுந்ததில் காட்டுத்தீ ஏற்ப்பட்டுள்ளது தீயணைப்பு துறையினர் இதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வோரோனேஜ் பகுதியில் 17 ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் அதன் உதிரி பாகங்கள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விழுந்து கட்டிடம் பாதிப்புக்குள்ளானது.
இதுபோலவே ரஷ்யாவில் 22 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒடேசா, சுமி ஆகிய பகுதிகளில் 15 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாகவும், 5 ட்ரோன்கள் மின்னனு சாதனங்கள் பயன்படுத்தியும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.