கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்..
மறைந்த தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.. அதன் பின் எம்.பி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துறை முருகன், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
அதன் பின் முதமைச்சர் ஸ்டாலின் அண்ணா சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.. அதன் பின் அவ்வளாகத்தில் இருந்து காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது..