அரசு மருத்துவமனையில் அளித்த சிகிச்சை..!! அப்பா மகனுக்கு நேர்ந்த கொடூரம்..!!
மன்னார்குடி அருகே இரவு உணவு வாங்கும்போது ஏற்பட்ட தகராரில் 30 பேர் கொண்ட கும்பல் வீட்டை அடித்து நொருக்கி 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேதமாக்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மகா தேவபட்டினம் செபஸ்தியார் கோயில் தெருவை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் (30) என்பவர் உள்ளிக்கோட்டை கடை தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் தனது உறவினரின் இறப்பிற்கு வந்த சிறுவர்கள் மற்றும் உறவினர்களுக்கு இரவு உணவு வாங்க கடைத்தெரு வந்துள்ளார். அப்பொழுது மேல நெம்மேலியை சேர்ந்த பெரியகருப்பு, முரளி, விக்கி ஆகிய மூவரும் இரவு உணவு வாங்கும் போது ஹானஸ்ட் ராஜை மதுபோதையில் தகாத வார்த்தையில் திட்டி கை மற்றும் பின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
பிறகு மகாதேவபட்டினம் உறவினரின் இறப்புக்கு வந்தவர்களுக்கு இரவு உணவை வாங்க சென்றுள்ளார் அந்த நேரத்தில் பெரிய கருப்பு உள்ளிட்ட 30 நபர்கள் மகாதேவபட்டினம் செபஸ்தியார் கோயில் தெருவில் உள்ள ஹானஸ்ட் ராஜ் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம், ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள எல்.இ.டி டிவி, ஜன்னல் கண்ணாடி கதவுகள், கட்டில், நாற்காலி உள்ளிட்ட பல பொருள்களை இரும்பு கம்பி, கட்டை, அரிவால் போன்ற பயங்கரமான ஆயுதங்களால் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளனர்.
அப்பொழுது ஆனஸ்ட்ராஜின் தந்தை அருள்தாஸ் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் கழுத்தை நெரித்து உனது மகனை உடனே இங்கே வரச்சொல் என்று கூறி அவரையும் தாக்கியுள்ளனர்.. .பின்னர் அவரது சட்டை பையில் செபஸ்தியார் கோவிலில் கல்வாரி மலை கட்டுவதற்கு ஊரில் உள்ள 150 குடும்பத்தினரிடம் இருந்து 50,000 ரூபாயை வசூல் செய்து வைத்திருந்த பணத்தையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் தகவலறிந்து வந்த பரவாக்கோட்டை, வடுவூர் காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஹானஸ்ட் ராஜ் மற்றும் அவரது தந்தை அருள்தாஸ் ஆகியோரை காவல்துறையினர் சிகிச்சைக்காக மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்தப் பகுதியில் இதுபோல் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும் தற்போது மது போதையில் வீட்டை அடித்து நொறுக்கி சேதபடுத்திய அனைத்து நபர்களையும் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் தெருவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த ஹானஸ்ட்ராஜ் மற்றும் அவரது தந்தை அருள்தாஸ் இருவருக்கும் படுக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்து அவதிக்குள்ளகிருந்தனர்..