சிக்கிய பாஜக வேட்பாளர்..!! சூரிய பிரகாஸ் வைத்த ட்விஸ்ட்..!!
சென்னை ராயப்பேட்டை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனுக்கு தொடர்பான மயிலாப்பூர் நிதி நிறவன மோசடி வழக்கு தொடர்பான தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் நிதி நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஆடியோ ஆதாரங்களை வழக்கறிஞர் சூரிய பிரகாஸ் வெளியிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் சூரிய பிரகாஷ், மயிலாப்பூர் நிதி நிறுவனம் இந்தியாவில் உள்ள பழமையான நிதி நிறுவனங்களில் ஒன்று என்றும் 525 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
125 வருடமாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பஜாக நிர்வாகியை கைது செய்யகோரி புகார் அளித்துள்ளனர். ஆனால் அவரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். மேலும் அவர் மீதான புகார்கள் குறித்து தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவாதித்த வழக்கறிஞர் தேர்தல் முடிந்தவுடன் தேவநாதன் வெளிநாடு தப்பி சென்றால் அவரை பிடிப்பது கடினம் என்பதால் தமிழ்நாடு காவல்துறை இந்த பிரச்சனையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் தெரிவித்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அண்ணாமலைக்கு இந்த விவகாரம் குறித்து தெரியும் என்றும் தேவநாதனை அண்ணாமலையும், தமிழிசையும் சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை பாதுகாக்க கூடாது என வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் பேசினார்.
அதனை தொடர்ந்து பேசிய ஆனந்த் சீனிவாசன், தேவநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதமாக வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துள்ள நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடும் B படிவத்தில் எப்படி அண்ணாமலை கையெழுத்திட்டார் என கேள்வியெழுப்பினார்.
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் காவல்துறையி புகார் அளித்து வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். எப்போதும் நியயம் பேசும் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ஆனந்த் சீனிவாசன் வலியுறுத்தினார்.