ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. கதறும் கர்பிணி தாய்..!
ரெட்டேரி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (30). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி துர்கா (26) என்ற மனைவியும் ஒன்றரை வயதில் கிருத்திகா என்ர பெண் குழந்தையும் இருந்தது. மேலும் துர்கா தற்போது 6 மாத கர்பமாக உள்ளார்.
இந்த நிலையில்
அப்போது நேற்று மதியம் வீட்டில் தாய் துர்கா தூங்கிகொண்டு இருந்த நிலையில் குழந்தை கிருத்திகா தாய் பக்கத்தில் விளையாடிக்கொண்டு இருந்தது.
சிறிது நேரத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தை காணமல் போனதால் அதிர்ச்சி அடைந்த தாய் துர்கா குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடினார்.
அப்போது வீட்டின் வெளியே 2 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை கிருத்திகா தவறி விழுந்திருப்பது தெரிய வந்தது. இதனை கண்டு கதற் துடித்த தாய் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார் குழந்தை கிருத்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்