திருவண்ணமாலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரபிரம்..! கோலாகலமாக துவங்கிய கொடியேற்றம்..!
திருவண்ணமாலை அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரபிரம் மோற்சவ விழா தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா தங்க கொடி மரத்தில், கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியுள்ளது. கொடியேற்றதிற்காக இன்று அதிகாலை மூலவர் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மா விற்கும் சிறப்பு அபிஷேக நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து ஆடி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் எதிரே உள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரிகள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
முன்னதாக விநாயகரும் பராசக்தி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி தந்தனர், இதனைத் தொடர்ந்து காலையிலும் இரவிலும் சாமி 10 நாள் உற்சவம் நடைபெறுகிறது.
அதுமட்டுமின்றி நேற்று ஆடிபூரம் என்பதால் உண்ணாமலை அம்மனுக்கு மாலை வளைகாப்பு நடைபெற்றது.., ஆடிபூரம் என்பது மிகவும் விசேஷமான நாள், இந்த நாளில் நாம் அம்மனை தரிசனம் செய்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அன்று அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து வழிபாடு செய்தால் நினைத்த செயல் வெற்றி பெரும் என்பது ஐதீகம்.
இன்னும் பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெறும் என்பதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகிகளும் காவல் துறையினரும் கூறியுள்ளனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் மற்றும் செய்திகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்