தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டுவரும் தனியார் உணவகத்தில் கெட்டுப்போன பரோட்டாவை விற்பனை செய்ததாக மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணின் கணவர் உணவகத்தின் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானாவிலக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது
இங்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளின் உதவிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவர்களது குடும்பத்தினரும் மருத்துவனையிலேயே உடன் தங்கி உள்ளனர்
குறிப்பாக பிரசவ வார்டில் தங்கி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களின் தேவைக்காக பால் பழம் பிஸ்கட் சுடுநீர் மற்றும் அவ்வப்போது ஆரோக்கியமாக தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளுக்காக மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் ஒப்பந்தம் விடப்பட்ட தனியார் உணவகத்தின் மூலம் வழங்கபட்டு வருகிறது
இந்த உணவகத்தை தேனியை சேர்ந்த மாரிச்சாமி என்ற நபர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏலத்தில் எடுத்துள்ளார். இந்நிலையில் தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட புரோட்டா கெட்டுப் போனதாக கூறி பிரசவத்திற்கு வந்திருந்த பெண்ணின் கணவர் ஒருவர் உணவகத்தின் ஊழியர்களிடம் கெட்டுப்போன பபரோட்டாவை காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய காணொலியையடுத்து உணவகத்தின் மீது தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.