கள்ளக்குறிச்சி அருகே நிதி நிறுவனம் நடத்தி சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் சுருட்டி கொண்டு தலைமறைவாக இருந்தவனை பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் சென்னையில் தேடி கண்டுபிடித்து தூக்கி வந்து பணத்தை கேட்டு வந்த நிலையில், இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு விசாரணை நடத்தி வருகின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூரார்பாளையம் என்ற கிராமத்தில் ஆட்டோ ஓட்டி வந்தவன் சமீர் அகமது வயது 36 என்ற இளைஞன். திடீரென அந்த இந்த இளைஞன் சமீர் அகமது தனது கிராமத்தில் சமீர் குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளான். இந்த நிதி நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் ஒரு வருடத்திற்கு மாதம் 14 ஆயிரம் வீதம் பணம் தருவது, 12 லட்சம் ரூபாய் கட்டினால் ஒரு வருடத்தில் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தருவது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூல் செய்துள்ளான். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த சுமார் 2000 த்ததிற்கும் மேற்பட்டோர் இந்த சமீர் அகமது விடம் பணம் கட்டி வந்துள்ளனர். சமீர் அகமதுவின் நிதி நிறுவனத் திட்டத்திற்கு பலர் ஏஜெண்டுகளாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். அந்த வகையில் சமீர் அகமதுவிடும் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேலாக பணம் குவிந்துள்ளது. முதலில் சிலருக்கு முறையாக பணத்தை அளித்து வந்த சமீர் அகமது, ஓராண்டுக்கும் மேலாக பணத்தை வசூலித்த சமீர் அகமது அங்கிருந்து தலைமறைவாகி உள்ளான்.
பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் சமீர் அகமது எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் தவித்து வந்த நிலையில், அந்த முரார்பாளையத்து கிராமத்தினர் சமீர் அகமது சென்னையில் ஈசிஆர் சாலையில் இருப்பதை கண்டுபிடித்தனர். பலமுறை சென்று கிராமத்தினர் பணத்தை கேட்டு அந்த நிலையில், பணத்தை இப்போது தருகிறேன் பிறகு தருகிறேன் என ஏமாற்றி வந்துள்ளான்.வழக்கம்போல் நேற்று சென்னை சென்ற கிராமத்தினர் சமீர் அகமதுவை அங்கேயே மடக்கி பிடித்து மேற்கொண்டு தங்கள் ஊரிலிருந்து ஆட்களை சென்னைக்கு வரவழைத்து சமீர் அகமதுவை காரில் தூக்கி போட்டுக்கொண்டு முரார்பாளையம் கிராமத்திற்கு வந்தனர். இங்கு வந்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி சமீர் அகமதுவை நன்கு கவனித்து பணத்தைக் கேட்டுள்ளனர். இதற்கிடையில் சமீர் அகமது பொதுமக்களிடம் பிடிபட்ட சம்பவம் அவரது மனைவிக்கு தெரிந்த நிலையில் அவரது மனைவி போலீசாருக்கு தகவல் தந்திருக்கிறார். இதன்பிறகு கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ் மற்றும் அருகிலுள்ள சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன் மற்றும் போலீசார் முரார்பாளையம் கிராமத்திற்கு வந்து அங்கு பொதுமக்கள் பிடியில் இருந்த சமீர் அகமதுவை மீட்டனர். பொதுமக்கள் குற்றவாளியை பிடித்து வைத்து தண்டிக்க கூடாது.. காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும் நீங்களே தண்டித்தால் உங்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என பொதுமக்களை போலீசார் மிரட்டியுள்ளார்கள்.
சமீர் அகமதுவை போலீசார் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, அங்கிருந்து பொதுமக்கள் விடவில்லை.. சமீர் அகமதுவை விட்டால் தங்களுக்கு பணம் வந்து சேராது என போலீசார் சமீர் அகமதுவை அழைத்து செல்வதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து போலீசார் சமீர் அகமதுவை அதே இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் இன்று முரார்பாளையம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமீர் அகமது ஊரில் பண வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, நவீன சொகுசு கார்களிலும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களிலும் வலம் வந்து கொண்டு, தன்னிடம் பணியாற்ற வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட சில அழகான பெண்களை உடன் வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் சீன் போட்டு வலம் வந்தான் என்றும் கூறுகின்றனர்.
பணத்தை ஏமாற்றிக் கொண்டு தலை மறைவான சமீர் அகமது மீண்டும் அதே மூரார் பாளையம் கிராம மக்களிடம் சிக்கிய பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களிடம் ஆலோசனை கூறிய போலீசார் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட பொருளாதார குற்ற பிரிவில் புகார் அளியுங்கள் என கூறினார்கள். அந்த வகையில் புகார் சென்ற பின்னர் போலீசார் இந்த சமீர் அகமது மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணையை நடத்துவார்கள் என தெரிய வருகிறது இந்த சம்பவம் இன்று முரார்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.