கனிமொழி பிரச்சாரத்திற்கு சென்ற வாகனம்..? பரபரப்பான தூத்துக்குடி..!!
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக எம்.பி கனிமொழி நிற்கிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அங்கே கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே சமயம் அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை 215,934 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் களமிறங்கியுள்ளார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் ஸ்டார் வேட்பாளர் தொகுதி கிடையாது. ஏனென்றால் கனிமொழி மட்டுமே இங்கே பலம் வாய்ந்த வேட்பாளர். அதனால் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் 100க்கு 100 மடங்கு உள்ளது என சொல்லலாம். அதற்கு ஏற்றார் போல கனிமொழிக்கும் அங்கே சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
இதனால் கனிமொழியும் பெரிதாக தூத்துகுடியில் அதிகம் பிரச்சாரம் செய்யாமல் வாரத்தில் 2-3 நாட்கள் அங்கே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எனவே கூட்டணி தலைவர்களுக்காக மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய களமிறங்கி உள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது ஜோதிமணி தொடர்ந்து தமிழ்நாடு உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடி இருந்தார். இதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.., நடாளுமன்றத்தில் அப்படித்தான் எதிர்த்து கேள்வி கேட்டால் நீக்கம் செய்யப்படுவார்கள்.
அதுவே வெளியே எதிர்த்து கேள்வி கேட்டால் ஜெயிலில் போடுவார்கள். உதாரணத்திற்கு நம் கட்சி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கூறலாம், அவருக்கு அமலாக்கதுறை அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியினால் தான் உடல்நிலை சரியில்லாமல் போனது. அதை தெரிந்தும் கூட சிறையில் வைத்துள்ளனர்.
செந்தில் பாலாஜியை விட கூடாது என்று மருத்துவ காரணம் இருந்தும் கூட உள்ளே வைத்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் வெளியே விட்டுவிடுவார்கள். வெளியே வந்தால் எங்கே சிலர் மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் அவரை வெளியிடாமல் சிலர் வைத்துள்ளனர். அவர் இல்லாமலாவது வெற்றிபெறுவோமா என்று பார்க்கிறார்கள்.
அவர் உள்ளே இருக்கும் போதே ஒருவருக்கு கரூரில் நிற்க பயம். ( ஜோதிமணி கைதட்டி சிரிக்கிறார்) அதனால் தான் அண்ணாமலை கோயம்புத்தூருக்கு ஓடினார். செந்தில் பாலாஜி உள்ளே இருக்கும்போதே அண்ணாமலைக்கு பயம். இரண்டு தகரப்பெட்டியோடு கோவைக்கு ஓடிவிட்டார். ஏன் கரூர் தொகுதியில் நிற்க வேண்டியது தானே..,
நீங்கள் என்ன செய்தாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜகவிற்கு கொடுத்து விட வேண்டாம். அவர்களுக்கு இடம் கிடைக்காது. அண்ணாமலை வாயை திறந்தால் பொய்தான். அவர் 20 ஆயிரம் புத்தகம் படித்து இருக்கிறேன் என சொன்னார்.., ஒரு நாளைக்கு 2 புத்தகம் படித்தால்தான் 20 ஆயிரம் புத்தகம் படிக்க முடியும். பாருங்கள் எப்படி எல்லாம் அவர் பொய் சொல்கிறார். என கேலியாக அண்ணாமலையை கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடிக்கு சென்ற கனிமொழி அங்கே பிரச்சார மேடைக்கு செல்லும் போது வழியில் கிராமம் ஒன்றில் மறிக்கப்பட்டார். அவரிடம் மக்கள் எதோ கேட்க போகிறார்கள் என நினைத்த கனிமொழி எல்லோரும் கூடி ஒரே ஒரு வார்த்தை பேசிட்டு போங்கம்மா என்றனர். கனிமொழி அப்படியே வியந்து கீழே இறங்கி செல்ல., அம்மா கீழே வேண்டாம்.. வேன் மேலே ஏறி நின்றே பேசுங்க என சொன்னார்.
எனவே மக்களின் விருப்பப்படி பேசிய கனிமொழி. உங்கள் அன்பை பார்த்து வியந்தேன். எங்கேயும் கிடைக்காத அன்பு எனக்கு இங்கே கிடைக்கிறது, அதற்கு நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். மீண்டும் நாம் ஆட்சி செய்வோம். இன்னும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறந்த ஆட்சி நடத்துவோம் என பேசினார்.