மக்களை அலைக்கழித்த ஒன்றிய அரசு…!! தமிழக அரசு செய்த சாதனை..!!
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடிய காலமாக குடியிருப்பவர்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பட்டா வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதனைய்டுத்து சென்னையில் மற்றும் சென்னையை சுற்றியுள் ள4 மாவட்டங்களில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேர் பட்டா இல்லாமல் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிகழ்வானது சென்னை செனாய் நகரில் உள்ள தனியார் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், அண்ணாமலை ஒருமையில் பேசியதில் பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இந்த பிரச்சனையை திசைமாற்ற, மடைமாற்ற பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் கோ பேக் மோடி என சொல்லி 2016ல் திருட்டுத்தனமாக வந்து சுவரை உடைத்து சென்றார். மக்களை சந்திக்க பயந்து, எங்கு பார்த்திலும் கருப்பு கொடி காட்டி பலூன் விட்டதெல்லாம் ஞாபகம் இருக்கும். நான் வீட்டில் தான் இருப்பேன். இன்று மாலை இளைஞர் அணி நிகழ்ச்சி உள்ளது. ஏற்கனவே அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என்று சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள்.
பிரச்சனை உதயநிதிக்கோ, முதலமைச்சருக்கோ கிடையாது. தமிழ்நாட்டின் நிதி உரிமையை கேட்டு வாங்குகிறோம். இதற்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்ய சொல்லுங்கள். தனியார் பள்ளிகள் மத்திய அரசின் அனுமதி வாங்கி தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளையும் ஒப்பபீடு செய்ய வேண்டாம்.
தனியார் பள்ளிகளில் காலை இலவச உணவு, சீருடைகள் கொடுக்கிறார்களா..? தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு விளையாட சென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதியில் தோல்வியுற்றுள்ளனர். இன்று ஊருக்கு திரும்ப ரயில் டிக்கெட் புக் செய்து வைத்திருந்தனர்.
உத்தர பிரதேசத்தில் கும்பமேளாவில் அங்கு ஆளும் பாஜக அரசும், மத்திய அரசும் கூட்ட மேலாண்மை குறித்து ஒன்றுமே தெரியாமல் மக்களை அலைக்கழித்துள்ளார்கள். எத்தனை இறப்புகள், படுகாயங்கள் அடைந்துள்ளன. ஆனால் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் இல்லை.
மக்கள் அஙகு இரயில் ஏற முடியாமல் தவித்ததை எல்லாம் பார்த்தோம். இவ்வளவு நடந்த பிறகும் அங்கு இருக்கக்கூடிய மாநில அரசும், மத்திய அரசும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரயில் கிடைக்கவில்லை என்ற தகவல் காலை ஆறு மணிக்கு கிடைத்தது. உடனடியாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் பேசி அவர்க ளைவிமானம் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்திருக்கிறார்.
உடனடியாக அந்த விளையாட்டு வீரர்களுக்கு உணவு, விமான பயணச்சீட்டு ஆகியவை ஒதுக்கப்பட்டு, இன்று மாலையை வாரணாசியிலிருந்து பெங்களூர், அங்கிருந்து சென்னை வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்காதது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவரும், தோழமைக் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்படும்.
திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல், கல்வி, வேலை வாய்ப்பற்ற மனிதர்களாகத்தான் இருந்திருப்போம். திராவிட இயக்கம் வந்த பிறகுதான் கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தன்னிறைவு நிலையை அடைந்திருக்கிறது.
உங்கள் பிள்ளைகளை எல்லாம் பட்டதாரி ஆக்கிய திராவிட மாடல் இயக்கம் இன்று உங்களை பட்டாதாரர் ஆக்கியுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் 12 லட்சத்திற்கு 29 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை வழங்கி சாதனை படைத்திருக்கிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..