9 ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும்-போக்குவரத்து கழகம்
cஊழியர்கள் அறிவித்துள்ள நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 9 ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9 ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9 ஆம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும், போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.