கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூரில் திருமண மண்டபத்தில் உணவு பரிமார சென்ற கல்லூரி மாணவர் சதீஷ் (20) உணவு பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
கடந்த 23ஆம் தேதி கொதிக்கும் ரசம் பாத்திரத்தில் தவறி விழுந்து தீக்காயங்களுடன் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த சதீஷ் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் பகுதி நேரமாக உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.