ADVERTISEMENT
தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஜெ.என். 1 (jn-1)
தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஜெ.என். 1 (jn-1) என்ற கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜெ.என். 1 (jn-1) என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.
புதிய வகை கொரோனா வீரியம் குறைந்தது எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல், சலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் எனவும், கொரோனாவின் போது அளிக்கப்பட்ட அதே முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், மாஸ்க் அணிதல், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகரை சேர்ந்த 55 வயது நபர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்
அதேபோல், கர்நாடக மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 7 நாள்கள் தனிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நான்கு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த 4 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனே பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டன.
அதில், 4 பேருக்கும் புதுவகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த 4 பேரும் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் என வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.