தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர், இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம் என்று பேசினார்.
சென்னை இலக்கியத் திருவிழா 2023-ஐ தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன்பிறகு, பேசிய முதல்வர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது மற்றும் திமுகவின் ஆட்சி காலம் எப்போதும் தமிழ் ஆட்சி காலம்தான் என்று கூறினார்.மேலும் பேசிய அவர், எத்தனையோ திட்டங்கள் வந்தாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் வள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்று வரை இருக்கிறது. மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது, அதனை அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். என்று பேசினார்.
அந்த விழாவில் மேலும் பேசிய முதல்வர், மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர், இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம், மொழியை காப்பாற்ற உயிரையே கொடுத்த இனம் தான் தமிழ் இனம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.