மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி.. திடீர் முடிவால் பரபரப்பு..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (62). சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த அவர், காலில் புண் ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆண்கள் அறுவை சிகிச்சை அரங்கம் அமைந்துள்ள பகுதியில் திடீரென தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கபட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்க்கரை நோயினால் காலில் ஏற்பட்ட புண்ணின் அவதியால்தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது வேறு ஏதும் காரணமா.? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வந்த நோயாளி திடீரென மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்