மகள் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் தவித்த தாய்… எடுத்த திடீர் முடிவு.. கதறும் உறவினர்கள்..!
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள கீழக்கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் திவ்யா. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 9-ஆம் தேதி அன்று, தற்கொலை செய்துக் கொண்டார்.
மகள் உயிரிழந்த துக்கத்தால், திவ்யாவின் தாய் ராதிகா, தினமும் சோகத்திலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மன அழுத்தம் மற்றும் துக்கத்தின் உச்சிக்கு சென்ற அவர், பெட்ரோல் ஊற்றி, தற்கொலை செய்து கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராதிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மகள் உயிரிழந்த துக்கம் தாக்க முடியாமல், தாயும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்