வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் கோடம்பாக்கத்தில் தனது நண்பருடன் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.


பேச்சுவார்த்தையின் இறுதியில் 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக ராஜ்குமார் தெரிவித்து இந்த சம்பவம் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.
– யமுனா