கிணற்றில் குளிக்க சென்ற காவலர்.. இறுதியில் நிகழ்ந்த பரிதாபம்.!
திருப்பூரைச் சேர்ந்தவர் தனுஷ். 24 வயதான இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து ஆவடி பெட்டாலியன் போலீசாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தனுஷ் இன்று தன்னுடைய சக காவலர்களோடு காஞ்சிபுரம் மாவட்டம் எட்டையாபுரத்தில் உள்ள கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது எதிரிபாரதவிதமாக தனுஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சோமங்கலம் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடம் தனுஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்