மகன்களின் பள்ளிக் கட்டணம்.. செலுத்த முடியாமல் தவித்த தந்தை..! விபரீத முடிவால் கதறும் குடும்பத்தினர்….!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வருபவர் வேலுசாமி மற்றும் சுருதி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவரிடம் சுருதி மகன்கள் இருவருக்கும் பள்ளி கட்டணம் கட்ட வேண்டும் கட்டணம் செலுத்தாததால் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு மனவேதனை அடைந்த வேலுச்சாமி பணத்தை எப்படியாவது கட்ட ஏற்பாடு செய்கின்றேன் என கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்றுள்ளார்.
அதன் பிறகு கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டுள்ள அவர் வெகுநேரம் ஆகியும் வெளியே வரததால் அச்சம் அடைந்த ஸ்ருதி கதவை தட்டியுள்ளார்.
கதவு திறக்கததால் ஜென்னல் வழியாக பார்த்த போது, வேலுச்சாமி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனை கண்டு கதறிய ஸ்ருதி அக்கம் பக்கத்தினரை அழைத்து வீட்டின் கதவை உடைத்து வேலுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமணைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த தந்தையின் இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்