வீட்டையே கொலு மண்டபமாக மாற்றிய தம்பதிகள்..! வைரலாகும் வீடியோ..!!
வீட்டையே கொலு அலங்கார மண்டபமாக மாற்றி, கொலு படிகளில் ஆயிரக்கணக்கான பொம்மைகளைக் வைத்து நவராத்திரி கொண்டாடும், மதுரை பார்க் டவுன் குருநாதன்-தேவசேனா தம்பதி..
மதுரை பார்க் டவுன் பகுதியில் வசிப்பவர் குருநாதன். இவரும் இவரது மனைவி தேவசேனாவும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக நவராத்திரியையொட்டி தங்கள் வீட்டையே கொலு அலங்கார மண்;டபமாக மாற்றி, ஆயிரக்கணக்கான பொம்மைகளை கொலு படிகளில் அடுக்கி வைத்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
விஜயதசமி வரை ஒவ்வொரு நாளும் பூஜை செய்து வருபவர்களுக்கு பிரசாதமாக இனிப்பு மற்றும் இதர சுண்டல் பிரசாதங்களை வழங்கி வருகிறார்கள். இந்த முறையும் அவர்கள் அவர்கள் மிக பிரமாண்;ட அளவில் கொலு அலங்காரம் வைத்துள்ளனர்.
வீட்டையே கொலு அலங்கார மண்டபமாக மாற்றியுள்ள தேவ சேனா கூறுகையில், எனக்கு இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என அனைத்து மதத்தினரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். அவர்கள் நவராத்திரி நாட்களில் எங்கள் வீட்டிற்கு வந்து கொலு அலங்காரத்தை பார்த்து பாராட்டிச் செல்கின்றனர். நாங்கள் அளிக்கும் பிரசாதங்களையும் அவர்கள் உவகையுடன் ஏற்றுச் செல்கிறார்கள்.
எம் மதமும் எங்களுக்கு சம்மதம் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. எங்கள் வீட்டு கொலுவை பார்த்து விட்டு செல்பவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறுதாகவும், குழந்தை வரம், திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகள் உடனடியாக நிறைவேறுதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள். இதனால் தங்களுக்கு நிறைந்த மன உணர்வு ஏற்படுகிறது என்றும் திருமதி தேவசேனா தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..