6 தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
லஞ்சப் புகார் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். லட்சம் கேட்டதாக புகார் வந்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை சார்பதிவாளர்-2வது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் கதவுகளை அடைத்து கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரப்பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கு லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல் நாகை, கடலூர், அரக்கோணத்தில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது,