கோயம்பேட்டில் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பித் தரப்படும்…
அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்துவைத்த நிலையில், நேற்று முதல் இப்பேருந்து முனையம் முழுவதுமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இதுவரை கோயம்பேட்டிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சென்று வந்த அரசு விரைவுப் பேருந்துகள், இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அரசு விரைவுப் பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்திலிருந்து முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் பேருந்து ஏற முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டண வித்தியாசத் தொகை திருப்பித் தரப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பயணம் தொடங்கும்போதே நடத்துநர்களால் தொகை வழங்கப்படும் என்றும், கட்டண வித்தியாசத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக பயணம் தொடங்கும்போதே நடத்துநர்களால் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)