கொடைக்கானலில் விவசாய நிலங்களில் மயில்கள் செய்த செயல்..!!
கொடைக்கானலில் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் முகாமிடும் தேசிய பறவையான மயில்களை வனத்துறையினர் பாதுகாக்க கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் முகாமிடுவது வாடிக்கையாக வைத்துள்ளது, குறிப்பாக காட்டெருமை, காட்டு பன்றிகள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முகாமிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தேசிய பறவையான மயில் பேத்துப் பாறை, வில்பட்டி, பள்ளங்கி, அப்சர் வேட்டரி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் முகாமிட்டு வருகிறது.
விவசாய நிலங்களில் முகாமிடும் மயில்கள் பீன்ஸ் வகைகள், அவரை உள்ளிட்ட காய்கறிகளை உணவாக உண்டு சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர், தற்போது குடியிருப்பு பகுதிகளில் முகாமிடும் மயில்களை சில மர்ம நபர்கள் வேட்டையாடும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதனை வனத்துறையினர் கவனம் செலுத்தி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முகாமிடும் மயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடைக்கானல் பொதுமக்கள், வனதுறையினற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.