தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 48,500 கோடி ரூபாய் கடன் சுமை இருக்கின்ற நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று நாகர்கோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மத்திய அரசு டீசல் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பேட்டரிகள் மூலம் இயங்கும் 2000 பேருந்துகள் வாங்குவதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளதாகவும் இதற்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பேருந்துகள் 1500 உள்ளதாகவும் அண்மையில் டெல்லியில் மத்திய அமைச்சர் நிதி கட்கரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரே நேரத்தில் 1500 பேருந்துகளை மாற்றுவது என்பது இயலாத காரியம் எனவே அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்