மாணவி பாலியல் சீண்டல் வழக்கு..!! தேசிய மகளிர் ஆணையம் விசாரணை..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டல் வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. .
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் குற்றவாளியான ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தனர்.
அதில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை அமைத்து விசாரணை செய்திடவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர் விசாரணை தொடங்க உள்ளதாகவும், தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..