திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு
மயிலாடுதுறைக்கு வந்த திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக இளைஞர் அணி மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும், என வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற முழக்கத்தோடு நவம்பர் 15 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருசக்கர வாகனப் பேரணியை விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி மயிலாடுதுறை வந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்தடைந்த இளைஞரணி நிர்வாகிகளுக்கு வானவேடிக்கையுடன் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.