நடிகர் திலகத்தின் சில திரைத்துளிகள்…!!
நடிகர் திலகம் தெய்வமாக வழங்குவது அவருக்கு முதல் படம் வாய்ப்பளித்த NATIONAL PICTURES PA PERUMAL அவர்கள் என தெரிவித்துள்ளார்.
நாடக கலைஞர் ,திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆரம்ப காலக்கட்டத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் தயாரித்த பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
ஆரம்பகாலத்தில் ஒரு சில நடிகர்கள் சினிமாவில் வருவதற்கு முன்பே னாடகங்களில் பெண் வேடத்தில் நடித்துள்ளதாகவும் தானும் பெண் வேடத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவர்க்கென தனி சிறப்பாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார்.
கலைஞருக்கு ஈடாக வசனம் எழுதுவதில் இந்த உலகத்திலேயே ஆளில்லைனு சொன்னா எதிரிக்கூட ஒத்துக்குவான் ஏனா அவரு ஒரு மாபெரும் எழுத்தாளர் என நடிகர் திலகம் சிவாஜி கானேசன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனை தொகுத்து வழங்கியவர் நடிகை மீனா.
சத்யா.கே