சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு…!! ஹேம்நாத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு..!!
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் இருந்து அவருடைய கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அவருடைய தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஹேம்நாத் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. அப்போது நீதிபதி ரேவதி கூறுகையில், சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் போலீஸார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஹேம்நாத்தை விடுதலை செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்து தான் சித்ராவின் தந்தை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் சித்ராவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கினார்…
– கவிப்பிரியா