ஆரம்பிக்கலாமா..? களத்தில் இறங்கிய பறக்கும் படை..!!
வேலூர், காட்பாடி, கேவிக்குப்பம், குடியாத்தம், அனைக்கட்டு உள்ளிட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா, பொருள் பட்டுவாடா ஏதேனும் நடக்கிறதா என கண்காணிப்பதற்காக பறக்கும் படையினர் தலைமையின் கீழ் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து நேற்று இரவு முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை எல்லா பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.