செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை..! உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.
கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 1 கோடியே 62 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்ததாக கூறி செந்தில் பாலாஜி மீது கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் ஆகிய மூவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரில் பெயரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை அடுத்து, வருமானவரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
அதன்பின் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லும் வழியில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இறுதியாக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போது அமைச்சராக இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும், ஜாமீன் வழங்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் அதில் இல்லை, என்பதால் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களையும் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் செந்தில்பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வாதம் செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை வேறு தினம் மாற்றி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை புதன்கிழமை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடக்க உள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..