கரூர் சிறைக்கு கொண்டு செல்லப்படும் செந்தில் பாலாஜி..!! அமலாக்க துறையின் அடுத்த கட்ட முடிவு என்ன..?
சட்ட விரோதமாக செயல்பட்ட குற்றத்திற்காக செந்தில் பாலாஜியை கடந்த ஜூலை 14ம் தேதி அமலாக்க துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த செந்தில் பாலாஜி உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அமலாக்கத் துறையினர்.., சென்னை நுங்கம்பாகத்தில் செந்தில் பாலாஜியை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை நுங்கம் பாகத்திற்கு கொண்டு வரப்பட்ட செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் இரவு பத்துமணி வரை விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின் செந்தில் பாலாஜிக்கு அங்கேயே உணவு வழங்கப்பட்டு.., அங்கேயே தங்க அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை மருத்துவ பரிசோதனைக்காக செந்தில் பாலாஜி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனைக்கு பின் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அமலாக்கதுறை துணை இயக்குனர் கார்த்திக் தசாரி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேற்று காலை 10:30 மணியளவில் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரின் உறவினர்கள் நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்தும் கேள்விகள் எழுப்ப பட்டுள்ளது.
அதற்கு செந்தில் பாலாஜி அளித்த பதில்கள் வைத்து வருகிற 12ம் தேதி வரை விசாரணை தீவிர படுத்தப்படும் என அமலாக்க துறை தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் செந்தில் பாலாஜியை கரூர் சிறைக்கும் அழைத்து செல்லுவோம் எனவும் கூறியுள்ளனர்.